எம் தமிழ் மொழி
கிடந்தது பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்திடினும்
கட்டி இழுத்து கால்கை முறித்து அங்கம்
பிளந்து இழந்து துடித்திடினும் பொங்கு
தமிழை பேச மறப்பேனோ ...............................
-மகாகவி பாரதியார்
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி”
என்ற செய்யுளுக்கு இணங்க பிறந்த மொழி எம் தமிழ் மொழி.

தமிழன் என்றொரு திமிர் உள்ளது தமிழ் மொழி எம் தாய் மொழி என்று
மற்ற மொழிக்கு இல்லாத சிறப்பு தமிழ் மொழியில் உண்டு .
எந்த மொழியிலும் 'ழ்' என்ற எழுத்து வந்தது இல்லை .
எங்களிடம் 'ழ்' உள்ளது என்பதே எங்கள் தமிழ் மொழியின் சிறப்பு .
இரண்டடியில் உலக தத்துவத்தை (திருக்குறள்) சொல்ல வைத்த மொழி எங்கள் தமிழ் மொழி ஆகும் .
செம்மொழி என்ற பெயருக்கு இணங்க இலக்கணங்களும் , செய்யுள்களும் ,நீதி நூல்களும் என பல நூல்கள் தமிழ் மொழியில் உள்ளது.
கலாசாரத்தையும் ,மக்கள் பண்பாடுகளையும் பல கதைகளும் , பல செய்யுள்களும், இன்றும் தமிழ் மொழி தமிழரின் பெருமையை பறைசாற்றுகிறது .
ஜி .யு .போப் தமிழ் மொழியின் மேல் கொண்ட பற்றின் காரணத்தால் தன் கல்லறையில் " இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்கி கொண்டிருக்கிறான் " என்று எழுத சொன்னார்.
என்னதா வெளிநாட்டில் மாட்டினங்கள் வாழ்ந்தாலும் அவைகள் கூறும் "அம்மா " என்ற மொழி எம் தமிழ் மொழியே!
பாரதி எழுதிய கவிதையும் ,கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலும் ,கவிஞர் வைரமுத்து எழுதும் கவிதையும் தமிழ் மொழிக்கென கிடைத்த பொக்கிஷம் ஆகும்.
தமிழ் மொழி எங்கள் தாய் மொழி அவ்மொழி பலவாறு தமிழர்களால் பேசப்பட்டு வருகிறது .தமிழ் நாட்டில் தமிழ்மொழி ஒவ்வொரு விதமாக சித்தரிக்கபடுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு உருவதிலும் பிரதிபலித்த மொழி எம் தமிழ் மொழி .
மறு மலர்ச்சி காலத்தில் விடுதலை உணர்வை மக்களிடம் சேர்க்க காகிதம் என்னும் உடலில் தமிழ் மொழி உயிராக எழுதி 'பத்திரிக்கை' என்னும் பெயர் கொண்டு மக்களிடம் சேர்ந்த மொழி எம் தமிழ் மொழி .
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு உருவதிலும் பிரதிபலித்த மொழி எம் தமிழ் மொழி .
மறு மலர்ச்சி காலத்தில் விடுதலை உணர்வை மக்களிடம் சேர்க்க காகிதம் என்னும் உடலில் தமிழ் மொழி உயிராக எழுதி 'பத்திரிக்கை' என்னும் பெயர் கொண்டு மக்களிடம் சேர்ந்த மொழி எம் தமிழ் மொழி .
உயிர் எழுத்தாக மட்டும் அல்லாமல் உயிரோடு கலந்த மொழி
எம் தமிழ் மொழி.
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா !
x
Comments
Post a Comment