Thirumayam Malaikkottai
'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரிலிருந்து வந்ததக்க கூறப்படுகிறது. இச்சொல்லானது 'மத்திய சேழந்திடம்'
என்ற பெயரிலிருந்து வந்ததக்க கூறப்படுகிறது.
'மஹாவிஷ்ணு' மெய்யர் என்ற பெயரில் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்து எழுந்து அருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
திருமயம் மலைக்கோட்டை :
திருமயம்னா முதல்ல நினைவுக்கு வர்றது திருமயம் மலைக்கோட்டை. அப்படிப்பட்ட திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னரான விஜயரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாக சொல்றாங்க.
இன்னும் இக்கோட்டை ஒரு வரலாற்று சின்னமாக இருக்கு. இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுது.
இக்கோட்டை வட்ட வடிவில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இக்கோட்டையில் அகழிகள் இருந்ததற்கான அடையாளம் இன்னும் இங்க காணப்படுது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரனான ஊமத்துரையை வெள்ளையர்கள் துரத்தும் போது இக்கோட்டையில் தான் ஒலித்து இருந்தாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
இக்கோட்டையில் இரண்டு பீரங்கிகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இக்கோட்டைக்கு அருகில் 'சிவன்' மற்றும் 'பெருமாள்' கோவில்கள் உள்ளன. சிவன் கோவில் சத்தியகிரீஸ்வரர் என்றும் பெருமாள் கோவில் சத்தியமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த இரண்டு கோவில்களும் ஓற்றுமைப்படுத்தும் வகையில் சத்தியஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோட்டையில் சிவனுக்கும், பெருமாளுக்கும் குடைவரைக்கோவில்கள் உள்ளன. இன்றளவிலும் இக்கோவில்களை இக்கோட்டையில் காணப்படுகிறது.
தீரர் சத்தியமூர்த்தி :
இவர் ஆகஸ்ட் 19, 1887 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்ற ஊரில் பிறந்தார்.
இவர் ஒரு காங்கிரஸ் அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் இந்திய விடுதலை வீரராக இருந்து, இந்தியா விடுதலை பெறுவதற்காக பாடுபட்டவர். பல விடுதலை போராட்டங்களில் கலந்து அயராது பாடுபட்டார். இந்திய அரசியலில், மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர்.
பெல் நிறுவனம் :
பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் ) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஆகஸ்ட் 2, 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொதிக்கலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப்படுகிறது .
Comments
Post a Comment