Magalin Alu Kural
உன் விரல் பிடித்து நடந்த தெரு இன்று
பூக்களால் நிரப்பப்பட்டது !
நான் வரும் நேரம் குறைந்தால் என் வருகையை
எதிர்பார்த்து நிர்ப்பாய் !
இன்று .....
நான் உன் அருகில் இருப்பது கூட அறியாமல்
கண்மூடி தூங்குகிறாயே
என்னை ஒரு முறை பார் அப்பா !
நான் அழுதால் தாங்க முடியாமல்
நான் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்தாயே !
என்னை ஒரு முறை பார் அப்பா என்று அழுகிறேனே .......
என் அழு குரல் கேட்கவில்லையா அப்பா !
என் தூக்கம் கலைக்காமல் நான் கண்மூடி
தூங்குவதை ரசித்தாய் அன்று !
இன்று ....
நீ தூங்குவதை ரசிக்க முடியாமல்
உன் தூக்கத்தை கலைக்கிறேனே .....
என்னை ஒரு முறை பார் அப்பா !
சுமையாக இருக்கிறேன் என்று பத்து மாதத்தில்
இறக்கி வைத்தாள்
என் தாய் .
அனால் , சுமையாக இருக்கிறேன் என்று ஒரு
நாளும் என்னை இறக்கியது இல்லை நீ .
நான் சென்ற பாதையெல்லாம் என் நிழலாக
வந்தாய்
இன்று .....
உன் பின்னால் வருகிறேனே
என்னை ஒருமுறை பார் அப்பா !
நான் தத்தி தவழ்ந்து நடப்பதை பார்த்து
மகிழ்ந்தாய் அன்று !
இன்று ...
மற்றவர் உன்னை சுமக்க நான் உன் பின்னால்
கண்ணீரோடு வருகிறேனே
என்னை ஒருமுறை பார் அப்பா !
ஊர் தாண்டி உன்னை அழைத்து செல்லும்போது
சுமை தாங்காமல் இறக்கி வைத்து ஓரமாக
நிற்க......
கண்ணில் வடியும் கண்ணீர் போதவில்லை என்று
தண்ணீர் குடம் உடைக்கிறேனே இன்று
என்னை ஒருமுறை பார் அப்பா !
உன்னை மட்டும் விட்டு விட்டு .
வந்த பாதையில் நான் செல்கிறேனே
வந்த பாதையில் நான் செல்கிறேனே
திரும்பி வர முடியாத பாதையில் நீ மட்டும் ஏன் அப்பா
செல்கிறாய்!
என்னை ஒருமுறை பார் அப்பா !
இறுதி வரை என் முகம் பார்க்காமல் இப்படி
உறங்குகிறாயே
என்னை ஒரு முறை கண்விழித்து பார் அப்பா!
heart touching words semmma baby
ReplyDelete